திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டு அண்ணா நகர் கவுன்சிலர் திரு.இளையவன் அவர்களுக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் சின்டெக்ஸ் டேங்க் பழுதடைந்த நிலையில் பல மாதங்களாக கவனிப்பாரற்று கிடந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டில் பெரும் அவதிக்குள்ளாகினர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் என்ற முறையில் இந்த பிரச்னையை ஊராட்சி தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்று மக்கள் குடிநீருக்காக பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்றும், பழுதடைந்த சின்டெக்ஸ் டேங்க் ஐ மாற்றி அமைத்துத் தருமாறு பலமுறை அறிவுறுத்தினார்.

இதன் பலனாக, என் புகார் மனுவை ஏற்ற ஊராட்சி தலைவர் அவர்கள், தற்காலிகமாக ஒரு புதிய தண்ணீர் டேங்க் ஐ அந்த பகுதியில் வைத்துக் கொடுத்தார், மக்களின் நிலையை கருத்தில் கொண்டு துரிதமாக செயல்பட்ட தலைவர் அவர்களுக்கு அண்ணா நகர் மக்களின் சார்பாக மணமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram