ஊர் சொத்தை எப்படியெல்லாமோ கொள்ளையடிக்கும் அதிகார கும்பலுக்கு மத்தியில, ஜனங்களோட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முனைப்போடு செயல்படும் மக்கள் பிரதிநிதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட, 12வது வார்டு அண்ணா நகர் பகுதியில் நீர் ஏற்றும் மின் மோட்டார் பழுதடைந்த நிலையில் அந்த பகுதி மக்கள் குடிநீருக்குக்காக பெரும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வராததால் தேசிய கட்சியை சேர்ந்த கவுன்சிலர் திரு.இளையவன் MC., அவர்களின் கவனத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு சென்றனர் .

பிரச்சனையின் தீவிரத்தை அறிந்த அவர், உடனடியாக தலைவரின் பார்வைக்கு கொண்டு இந்த பிரச்னையை கொண்டு சென்று தங்கள் பகுதி மக்கள் குடிநீருக்காக பெரும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள் என்றும் பழுதடைந்த மின்மோட்டாரை சரி செய்து தருமாறு புகாரினை அளித்தார் .

நமது நிருபருக்கு பேட்டி அளித்த அவர் “என்னுடைய மனுவை பரிசீலித்த தலைவர் அவர்கள், புகார் மனுவை ஏற்று உடனடியாக சரி செய்தும் கொடுத்துள்ளார் . இதற்க்காக தலைவர் அவர்களுக்கு அண்ணா நகர் மக்களின் சார்பாக மணமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” – இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram