சமந்தா வேலூர் தங்க கோயிலுக்கு சென்று புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இது வைரலாகி வருகிறது.

வேலூர் தங்க கோவிலுக்கு நடிகை சமந்தா காரில் சென்ற புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் கோவிலுக்கு செல்லும் வழிநெடுக எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் சமந்தா பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது மேலும் அவரது காரில் சாலை வழியாக செல்லும்போது தமிழ் சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டு செல்லும் விடியோவையும் அவர் பதிவேற்றி இருக்கிறார்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம்பூர் கோவிலுக்கு சென்ற அவர் சுவாமி தரிசனம் செய்து திரும்பியுள்ளார். அங்குள்ள மத குருமாரிடம் ஆசி பெற்றவர் பிறகு அங்குள்ள லட்சுமி அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார்.

கோயில் நிர்வாக ஊழியர்கள் சமந்தாவுக்கு நல்லமுறையில் உபசரிப்பு அளித்து சிறப்பித்தனர் தற்காலிகமாக படப்பிடிப்புகள் இருந்துவிடு விடுமுறை எடுத்துள்ள சமந்தா தற்போது தனது மயோசிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் ஈடுபடுகிறார், அதில் ஒரு பகுதியாக தான் வேலூர் தங்க கோயிலுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram