![](https://tamilnadu-today.com/wp-content/uploads/2023/07/FB_IMG_15115406595185315.jpg)
கர்நாடக மாநிலத்தில் 361 அரசு உயர்நிலைப் பள்ளிகளை பியூ கல்லூரிகளாக தரமுயர்த்தம் திட்டத்தை நிதி பற்றாக்குறை காரணமாக மாநில அரசு கிடப்பில் போட்டுள்ளது.
![](https://tamilnadu-today.com/wp-content/uploads/2023/07/download-1.jpg)
கர்நாடக சட்டமேலவை பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில் கல்வித்துறை தொடர்பான கேள்விகளுக்கு கல்வித்துறை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக கொடுத்த அறிக்கையின் பேரில் 67 அரசு உயர்நிலைப் பள்ளிகளை PU கல்லூரியாக தரம் உயர்த்தும் திட்டம் உள்ளது.
![](https://tamilnadu-today.com/wp-content/uploads/2023/07/file7l0mvcpsm5ei4xb1doy-1230277-1687451041-1-1230277-1687488670-1024x576.jpg)
ஆனால் மாநிலத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு 361 பள்ளிகளின் தரம் உயர்த்தும் திட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. 361 உயர்நிலைப் பள்ளிகளை தரமுயர்த்தும் முன்மொழிவுகளை பரிசீலிக்க நிதித்துறை சில விஷயங்களை தெளிவுபடுத்த கூறியுள்ளது, நிதித்துறையின் அனுமதி கிடைத்தவுடன் அந்த உயர்நிலை பள்ளிகள் பியூ கல்லூரிகள் ஆக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் பங்காரப்பா தெரிவித்தார்.
2022-23 ஆம் கல்வியாண்டில் 105 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட நிலையில் 2023-24 ஆம் கல்வியாண்டில் வெறும் 8 அரசு தொடக்கப் பள்ளிகளை மட்டுமே உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.