பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். விழாவில்...
அரசியல்
அண்ணாமலை எத்தனை காரணம் கூறினாலும். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும் என்று அமைச்சர் சேகர்பாபு...
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பேசவைப்பதற்கான இறுதி முயற்சி இந்தியா கூட்டணிக் கட்சி மக்கள் மக்களவையில் தாக்கல் செய்த்...
மேலும் ஒருவர் கைது. மணிப்பூர் பழம் கூடிய பெண்களின் நிர்வாண ஊர்வலம் நடத்தியதால் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார்...
பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் மாவட்டம் மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சந்திர...
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு குறித்து கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்ற பாடலை...
ஆளும் கட்சியின் கொடி நிறத்தில் ஒடிசா அரசு பள்ளி சீருடைகள் நிற மாற்றம் எதிர்க்கட்சிகள் கண்டனம். ஒடிசாவில் அரசு...
கர்நாடகத்தில் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் உற்சாகத்தில் உள்ளது.கடந்த 10 ஆம் தேதி கர்நாடகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் இன்று 36 மையங்களில் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. உருண்ட பெரிய தலைகள் அரசியல்.ல இதெல்லாம் சகஜம்.பா என கவுண்டமணி சொன்னதை போல கர்நாடக தேர்தலில் பல பெரிய தலைவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பிஜேபி யில் ஏறக்குறைய 14 அமைச்சர்கள், தமிழ்நாடு பிஜேபி மேலிட பார்வையாளர் சி. டி. ரவி, மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமியின் மகன் நிகில் உள்ளிட்ட பலரும் தோல்வி அடைந்துள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் 10 க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் என அனைத்து வழிகளை பயன்படுத்தியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் பிஜேபி.யினர் பீதியில் உள்ளனர். ராகுலின் நடைபயணம் வெற்றியா ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம் இந்த தேர்தலில் எதிரொலித்தது என காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கி மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. பெரும்பான்மை கிடைக்காது மற்றும் தொங்கு சட்டசபை அமையும் என பல கருத்து கணிப்புகளும் தெரிவித்தன. இருப்பினும் பெரும்பான்மையை விட 23 இடங்கள் அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் உள்ளது. யார் அடுத்த முதல்வர் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அடுத்த முதல்வர் யார் என்பதில் சரிவை சந்தித்து வருகின்றது. ஒருபுறம் முதல்வர் பதவியில் அனுபவமிக்க சித்தராமையா, மற்றொரு பக்கம் இந்த வெற்றிக்கு பல வகைகளிலும் பணத்தை செலவழித்த மாநில தலைவர் சிவக்குமார், இதில் யாரை தேர்ந்து எடுப்பது என விழி பிதுங்கி நிற்பது என்னமோ உண்மை. ஏற்கனவே ராஜஸ்தானில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வருகிறது. இதை எப்படி சமாளிக்க போகிறது என்பதை வருகின்ற நாட்களில் தெரிந்து கொள்ளலாம். தென்னிந்தியாவில் ஆட்சியை இழந்த பிஜேபி தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் மட்டும் ஆட்சி பீடத்தில் இருந்த பிஜேபி இன்று அதையும் இழந்துள்ளது.
டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னரை விட மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அதிகாரம் என நேற்று உச்சநீதி...
வந்தே பாரத் ரயில் சேவை என்பது இந்திய நகரங்களுக்கு இடையே உள்ள அதிகமான இடைவெளியை குறைத்து அதிவேகமாக செல்லக்கூடிய பணி...