ஈரோடு மாவட்டம் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈரோடு வன சரக குழுக்கள் ஈரோடு வனவியல் விரிவாக்கக் கோட்ட குழுக்கள் உள்பட பல்வேறு வன சரக குழுவினர் காட்டு முயல் வேட்டை குறித்து நேற்று முன்தினம் தொட்டிப்பாளையம் கிராமத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்
அப்போது, வாட்ஸ்ஆப் செயலி குழு மூலம் தகவல்கள் பரிமாறிக் கொண்டு வேட்டையாடுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கும்பலை கண்காணித்த வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்குள்ள பட்டா நிலங்களில் கும்பல் கும்பலாக ஏராளமானோர் காட்டு முயலை வேட்டையாடிக்கொண்டிருந்தனர். இதையடுத்து வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கிட்டத்தட்ட 107 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த ஐந்து முயல்கள் மற்றும் வேட்டையாடு வதற்கு பயன்படுத்தப்பட்ட கம்புகள் ஏராளமான செல்போன்கள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், ஆடி மாதம் கோயில் திருவிழாவையொட்டி குறிப்பிட்ட சமூகத்தினர் காட்டு முயல் வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பதாகவும், அதன்படிதான் இந்த ஆண்டும் நாங்கள் திருவிழாவை ஒட்டி வேட்டையாட வந்தோம் என்றும் தெரிவித்தனர்.