Admin

ஆளும் கட்சியின் கொடி நிறத்தில் ஒடிசா அரசு பள்ளி சீருடைகள் நிற மாற்றம் எதிர்க்கட்சிகள் கண்டனம். ஒடிசாவில் அரசு...
தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். போட்டியில் இருந்து முதல் ஆளாக டெல்லி அணி வெளியேறியது. பரிதாப டெல்லி ஆரம்பத்தில் இருந்தே சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் முதல் ஆளாக வெளியேறியது டெல்லி அணி. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், சால்ட், அக்சர் பட்டேல் உள்ளிட்ட திறமையான பல வீரர்கள் இருந்ததால் சாம்பியன் பட்டம் பெறும் போட்டியில் டெல்லி அணியும் இருந்தது. பவுலிங் இல் குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்களின் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஆரம்பத்தில் இருந்தே  பேட்டிங்கில் வார்னர் ரன்களை குவித்தாலும் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருந்ததால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. பின்னால் வரும் வீரர்களுக்கு போதிய பந்துகள் கிடைக்காமலும், ரன் ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்ற அவசரமும் அணியின் வெற்றிக்கு பாதகமாக அமைந்தது.  கடைசி கட்டத்தில் அக்ஷர் பட்டேல் அடித்தாலும் அது வெற்றிக்கு உதவவில்லை என்பது உண்மை. பின்னாடியே ஹைதராபாத், கொல்கத்தா டெல்லியை தொடர்ந்து பின்னாடியே ஹைதராபாத் அணியும் பிளே ஆஃப் சுற்றிற்கு செல்வது சந்தேகம் தான். அந்த அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மட்டுமே உள்ளன. மூன்றில் வெற்றி பெற்றாலும் கூட மொத்தம் 7 வெற்றிகள் தான் வரும். அதேபோல் தான் கொல்கத்தா அணிக்கும் 2 போட்டிகள் தான் உள்ளன. 5 வெற்றிகள் பெற்றுள்ள நிலையில் இனி விளையாட போகும் 2 போட்டிகளில் வென்றால் கூட 7 வெற்றிகள் தான் வரும்.  பார்க்கலாம். இன்னும் சில தினங்களில் எந்தெந்த அணிகள் உள்ளே, வெளியே என்பது தெரிந்து விடும்.
கர்நாடகத்தில் பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் உற்சாகத்தில் உள்ளது.கடந்த 10 ஆம் தேதி கர்நாடகத்தில் ஒரே  கட்டமாக நடைபெற்ற பொதுத்தேர்தல் முடிவுகள் இன்று 36 மையங்களில் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வந்தது. உருண்ட பெரிய தலைகள் அரசியல்.ல இதெல்லாம் சகஜம்.பா என கவுண்டமணி சொன்னதை போல கர்நாடக தேர்தலில் பல பெரிய தலைவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பிஜேபி யில் ஏறக்குறைய 14 அமைச்சர்கள், தமிழ்நாடு பிஜேபி மேலிட பார்வையாளர் சி. டி. ரவி, மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமியின் மகன் நிகில்  உள்ளிட்ட பலரும் தோல்வி அடைந்துள்ளனர். பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் 10 க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் என அனைத்து வழிகளை பயன்படுத்தியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் பிஜேபி.யினர் பீதியில் உள்ளனர். ராகுலின் நடைபயணம் வெற்றியா ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமை நடைபயணம் இந்த தேர்தலில் எதிரொலித்தது என காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கி மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. பெரும்பான்மை கிடைக்காது மற்றும் தொங்கு சட்டசபை அமையும் என பல கருத்து கணிப்புகளும் தெரிவித்தன. இருப்பினும் பெரும்பான்மையை விட 23 இடங்கள் அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சி உற்சாகத்தில் உள்ளது. யார் அடுத்த முதல்வர் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் அடுத்த முதல்வர் யார் என்பதில் சரிவை சந்தித்து வருகின்றது. ஒருபுறம் முதல்வர் பதவியில் அனுபவமிக்க சித்தராமையா, மற்றொரு பக்கம் இந்த வெற்றிக்கு பல வகைகளிலும் பணத்தை செலவழித்த மாநில தலைவர் சிவக்குமார், இதில் யாரை தேர்ந்து எடுப்பது என விழி பிதுங்கி நிற்பது என்னமோ உண்மை. ஏற்கனவே ராஜஸ்தானில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டு வருகிறது. இதை எப்படி சமாளிக்க போகிறது என்பதை வருகின்ற நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.  தென்னிந்தியாவில் ஆட்சியை இழந்த பிஜேபி தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் மட்டும் ஆட்சி பீடத்தில் இருந்த பிஜேபி இன்று அதையும் இழந்துள்ளது.
டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னரை விட மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கே அதிகாரம் என நேற்று உச்சநீதி...
வந்தே பாரத் ரயில் சேவை என்பது இந்திய நகரங்களுக்கு இடையே உள்ள அதிகமான  இடைவெளியை குறைத்து அதிவேகமாக செல்லக்கூடிய பணி...
இந்த நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் வங்கி கணக்கு வைத்து, அதனை முறையாக பராமரிக்கிறீர்கள். தொலைவில் இருப்பவர்களுக்கு பணத்தை அனுப்பவும்,...
பொதுவாகவே இளசுங்களை தன் பக்கம் இழுத்து அவர்கள் மத்தியில் பேசுபொருளாக இருப்பவர் வெங்கட்பிரபு.. ஸ்டார்  ஹோட்டல் சப்ளையர் மாதிரி யார், யாருக்கு என்ன வேணுமோ அதை அன்லிமிடெட்.ஆக பரிமாறுவதில் பி.ஹெச்.டி… வாங்கியவர் வெங்கட். தனது முதல் படமான *சென்னை 600028*.இல் அதுவரை கிரிக்கெட்.டை பற்றி யாரும் சொல்லாத கோணத்தில் காதல், நட்பு என இளநெஞ்சங்களை கட்டிப்போட்டு இருந்தார். அடுத்து தல அஜித்தின் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர் போல *மங்காத்தா*.வில் பொளந்து கட்டினார். நெகடிவ் ரோலில் வாலி. க்கு பிறகு அழுத்தமான ரோலில் அஜித்தை பட்டய கிளப்ப வைத்தார். ஆம்பூர் *பிரியாணி* யை *சரோஜா* கையால் *கோவா* வில் சாப்பிட்டு விட்டு *மன்மதலீலை* யை தொடங்குவது போல பல நேர்த்தியான படங்களை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் படமாக்கி இருந்தார். சிம்புவுக்கு சினிமா மார்க்கெட் தொலைந்து போன சமயத்தில் *மாநாடு* போட்டு அவரை மீண்டும் வெற்றி சிம்மாசனத்தில் அமர வைத்தார்.. சின்ன குழந்தை முதல் இப்ப வரை கையை ஆட்டி,  காலை தூக்கி பல இம்சைகள் செய்தாலும் பெரிய வெற்றியை சுவைக்காமல் இருந்த சிம்பு வெங்கட் பிரபு.வால் மீண்டும் கல்லா கட்ட துவங்கி உள்ளார். காப்பாத்துமா கஸ்டடி தெலுங்கு நடிகர் நாக சைதன்யா.வை மே மாதம் 12 ஆம் தேதி  *கஷ்டடி* யில் எடுத்து மீண்டும் களமாட காத்து இருக்கிறார் வெங்கட். தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது. தமிழில் கொடி நாட்டிய ஆள் தற்போது *கார தேசமான ஆந்திர பிரதேசத்தில்* காலடி எடுத்து வைக்க இருக்கிறார். ஆனால் இந்த படத்தில் ஒரு திருஷ்டி பூசணிக்காய் ஒன்று   உள்ளது. அது இவரின் ராசிக்கு வெற்றியை தேடி தரும். அந்த திருஷ்டி வேறொன்றுமில்லை பிரேம்ஜி தான்.
இன்று இந்தியாவில் டாக் ஆப் தி ஹீரோ.வாக பார்க்கப்படுபவர் 61 வயது நிரம்பிய கீரவாணி. இவரின் முந்தைய பெயர் மரகதமணி. ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்திருப்பது தெலுங்கு சினிமாவிற்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கே பெருமை தரக்கூடிய விஷயமாகவே கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக முதன் முதலில் இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர் ஏ.ஆர்.ரஹ்மானாக இருந்தார். அதன் பிறகு அதே துறையில் இப்பொழுது மீண்டும் ஒரு ஆஸ்கார் என நினைக்கும் போது இந்திய சினிமாவே மார்தட்டிக் கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது. அந்த விருதுக்கு சொந்தக்காரராக இருப்பவர் கீரவாணி. இசைக்கு மட்டுமில்லாமல் அந்த பாடலை எழுதிய பாடலாசிரியரான சந்திரபோஸுக்கும் அந்த விருது கிடைத்துள்ளது. பொதுவாகவே இசையமைப்பாளர் என்றால் ஒரு வித ஸ்ட்டெலாக இருப்பார்கள் என்று தான் ஒரு பிம்பம் இருக்கின்றது. உதாரணமாக அனிருத், தேவி ஸ்ரீபிரசாத், தமன், போன்றவர்கள் பார்ப்பதற்கே அந்த துறு துறு போக்கில் எப்போதுமே இருப்பார்கள். ஆனால் ஆர்.ஆர்.ஆர் படத்தின் இசையமைப்பாளரான கீரவாணியை பார்க்கும் போது இவரும் இசையமைப்பாளரா? என்று கேட்க கூடிய அளவிற்கு மிகவும் சாதுவாக குறிப்பாக சொல்லப்போனால் வாழ்க்கையில் பல அடிகளை பட்ட ஒரு இயக்குனர் மாதிரி இருப்பார். ஆனால் அவர் தான் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய டிரெண்டிங்கான நபராக வலம் வருகிறார். 90களில் வெளிவந்த கொண்டாட்டம், பிரதாப் போன்ற அர்ஜூன் படங்களுக்கு இவர் தான் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நண்பர்கள் கொண்டாடிய ‘வானமே எல்லை’ படத்திற்கும் கீரவாணி என்கிற மரகதமணி தான் இசையமைத்திருக்கிறார். வானமே எல்லை படத்தின் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்.  இன்று அனைவரின் கனவாக இருக்கும் ஆஸ்கர் விருதை் வென்று முதிய வயதிலும் சாதித்துள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை முஸ்லீம்களின் வாழ்வியலை அடிப்படையாக கொண்ட படங்கள் வருவது மிகவும் அபூர்வம். இந்து மற்றும் கிறிஸ்தவ நட்பு, குடும்பங்கள் குறித்த படங்கள் அதிகமாக வந்துள்ளன. முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், தான் பட்ட கஷ்டம் தன் குழந்தைகள் பட கூடாது என்பதற்காக வேலைக்கு செல்கிறாள். அங்கு அவள் சந்திக்கும் பிரச்சினைகள், சிக்கல்கள் என்ன என்பதையும் அதிலிருந்து அவள் மீண்டாளா என்பதையும் அழகான திரைக்கதை மூலம் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறியிருக்கிறார். அப்படி என்ன தான் கதை? சென்னை திருவல்லிக்கேணியில் கணவர் ஜித்தன் ரமேஷ்,  மூன்று குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சூழ கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்கிறார். அது ஒரு கால் சென்டர். கூடுதல் சம்பளம், இன்க்ரிமென்ட் கிடைக்கும் என்பதற்காக பிரண்ட் ஷிப் சாட் என்ற பிரிவுக்குச் செல்கிறார். அங்கு வரும்  டெலிபோன் கால் கள் அனைத்துமே ஆபாசமானவைதான். தங்கள் அடையாளத்தைச் சொல்லாமல் பணி செய்பவர்கள் வரும் போன்கால்களில் பேசவேண்டும். இப்படியெல்லாம் கூட  கால் சென்டர்  இருக்கிறதா?. ஒரு வாரம் அதில் வேலை பார்க்கலாம் இல்லையென்றால் மாறிக்கொள்ளலாம் என நினைத்து செல்கிறார். அப்படி வரும் ஒரு காலில் ஒருவரிடம் பேசி வருகிறார். ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் யார் என்பதை தெரிந்து கொண்டு, அந்த நபர் ஐஸ்வர்யா ராஜேஷை மிரட்ட ஆரம்பிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை. எந்த மதப் பெண்களாக இருந்தாலும் பல பெண்கள் அவர்களது விருப்பம் போல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாத ஒரு கட்டமைப்புதான் நம்மிடம் உள்ளது. தங்கள் கனவுகளை, ஆசைகளை, லட்சியங்களைத் துறந்து ஏதோ ஒரு சூழலில் அவர்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தள்ளப்படுகிறார்கள். அப்படியான ஒரு கதாபாத்திரமாகத்தான்  பர்ஹானா கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்படிப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சினைகளைச் சமாளிக்க வேலைக்கு வந்தால் அங்கு சில விஷமிகளால் எவ்வளவு தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை இப்படம் பதிவு செய்துள்ளது. நெகடிவ் கருத்தும், சில நெருடல்களும் சென்னையை பொறுத்தவரை பலதரப்பட்ட வேலைகள் இருக்கும்போது ஒரு குடும்பப்பெண் இவ்வாறு கால் செண்டரில் ஆபாசமாக பேசும் ஒரு  பணிக்கு செல்வாளா என்பதே சின்ன நெருடல். அதுவே இந்த கதாபாத்திரத்தின் மேல் ஒரு பரிதாபம் வருவதற்கு பதிலாக முரண்பாடு தான் தோன்றுகிறது. இதுவரை நடித்திராத, மனைவிக்கு உறுதுணையாக இருக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். மிகவும் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஐஸ்வர்யாவின் தோழிகளாக அனுமோள் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் பெண்கள் தடம் மாறினால் எப்படிப்பட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதை ஐஸ்வர்யா தத்தா கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.
இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இன்று வெளி வந்துள்ள ராவண கோட்டம் படம் பல பகுதிகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. கருவேல மர பிரச்சினை கதையா சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் வந்த மதயானைக்கூட்டம் படத்திற்கு பிறகு விக்ரம் சுகுமாரன் இயக்கிய படம் ராவண கோட்டம் . சாந்தனு பாக்யராஜ், பிரபு, இளவரசு, கயல் ஆனந்தி, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் விக்ரம் சுகுமாறனின் முதல் படமான மதயானைக் கூட்டம் சாதியை மறுத்தாலும், சில இடங்களில் சாதியைத் தூக்கிப் பிடிப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில்,  இராவண கோட்டம்  படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின், அதேபோன்ற விமர்சனங்கள் இந்தப் படத்துக்கும்  எழுப்பப்பட்டன. இந்த படத்தை பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் வாழும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்த மக்கள் பழகி வருகின்றனர். இந்த இரண்டு ஜாதியை சேர்ந்தவர்களை நடிகர் பிரபு. வும், இளவரசு. வும் நட்பு பாராட்டுகின்றனர். இந்நிலையில் அந்த இரண்டு கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் உருவாகிறது. இதை தீர்க்க வரும் பிரபு. வும், இளவரசுவும் கொல்லப்படுகின்றனர். அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை. இதில் என்ன ஜாதி பிரச்சினை இதில் சாந்தனு. வும், கயல் ஆனந்தியும் காதலர்களாக வருகின்றனர். 1957 ஆம் ஆண்டு நடந்த  முதுகுளத்தூர் கலவரத்தின் பின்னணியில், சாதீய பிரச்சினை, முக்கோணக் காதல் கதை மற்றும் சில கமர்ஷியல் அம்சங்களையும் கூட்டி கதை சொல்லியிருக்கிறார்கள். சாந்தனுவா இது? இதுவரை சாக்லேட் பாயாக வலம் வந்த பாக்யராஜ் மகன் சாந்தனு இந்த படத்தில் கரடு முரடான இளைஞன் பாத்திரத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளைக் காட்டிலும் ஆக்ரோஷமாக கபடி விளையாடுவது, பிரபுவுக்காக கதறி அழும் காட்சிகள், நண்பனிடம் பேச முடியாமல் வருந்தும் காட்சிகளில் சாந்தனு மிளிர்கிறார். இரு சமூகத்து தலைவர்களாகவும் நண்பர்களாகவும் வலம் வரும் நடிகர் பிரபுவும் இளவரசுவும் தேர்ந்த முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நம்மைப் படத்துடன் ஒன்ற வைக்கின்றனர். சாந்தனுவின் நண்பராக மதிமாறனாக நடித்துள்ள சஞ்சீவ் சரவணனுக்கு கனமான பாத்திரம். தன் நண்பன் சாந்தனுவின் காதலி ஆனந்தியுடன் சூழ்ச்சியால் காதலில் விழும் இடங்களில் பரிதாபத்துக்கு பதிலாக சிரிப்பையே வரவழைக்கிறார். இன்னும் கொஞ்சம் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கலாம். ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்குத் தேவையானதை செய்கின்றன....
error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram