![](https://tamilnadu-today.com/wp-content/uploads/2023/07/Chennai-Guruvayur-785NS-SETC-Bus-Timings-1024x787.jpg)
இன்றும் நாளையும் 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்.
மொகரம் பண்டிகை மற்றும் வார இறுதியை முன்னிட்டு இன்றும் நாளையும் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில். கூறியிருப்பதை.
மொகரம் பண்டிகை 29 ஆம் தேதி மற்றும் வார இறுதி முன்னிட்டு, ஜூலை 28 ஆம் தேதி மற்றும் ஜூலை 29 ஆம் தேதி ஆகிய இரண்டு தேதிகளில் பொது மக்களின் வசதிக்கு சென்னையில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம். விருத்தாச்சலம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.