தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்காமல்  புறக்கணிக்க திட்டமிட்டுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் தொடர்ந்து மோதல், போக்கை கடைபிடித்து வருகிறார். இதன் உச்சகட்டமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே ஊழல் முதல்வர் என்று அண்ணாமலை தெரிவித்தார். அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

அணியில் இருந்து கொண்டு இவ்வாறு பேசியது அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது அண்ணாமலையின் இந்த கருத்துக்கு அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலையின்  கருத்துக்கு எதிராக கண்டனம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய முக்கிய நிர்வாகிகள் பலரும் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram