நேரம் எல்லாம் சரியாக அமைந்துவிட்டால் வாழ்க்கையில் ஓஹோன்னு வந்து விடுவார்கள் என்பது பழமொழி, இந்த. இப்பொழுது தக்காளிக்கு வந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது.

நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு எகிறியுள்ளது ஹோட்டல்கள் வீடு சுப நிகழ்ச்சிகள் என்று எதை எடுத்தாலும் இன்றைக்கு காஸ்ட்லியான மெட்டீரியல் ஆக தக்காளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தக்காளி பயிரிட்டுள்ள நிலத்துக்கு பல லட்சங்கள் செலவு செய்து வேலி அமைப்பது தொடங்கி கடைகளில் பவுன்சர்கள் சிலர் வைத்து தக்காளி வியாபாரம் செய்கிறார்கள் சமையலில் ரெண்டு தக்காளி கூட சேர்த்தால் சண்டை ஏற்படும் குடும்பமும் இருக்கத்தான் செய்கிறது விலை ஏற்றத்தால் மும்பை விவசாயி கோடீஸ்வரரானது என பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது

அதன்படி தற்போது ஆடி மாச சீர் வரிசையிலும் தக்காளிக்கு ஒரு தட்டு இடம் கிடைத்துள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த காமாட்சியம்மன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்யா, இருவருக்கும் பள்ளி கொண்டவை சேர்ந்த லீலா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணமான முதலாவது ஆடி மாதத்தையொட்டி பெண் வீட்டாரின் ஆடி மாத சீர்வரிசை வைத்து மகளையும் மருமகனையும் தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம்.

அதன்படி நாளை ஆடி மாதம் பிறப்பதை முன்னிட்டு வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் லீலா பிரியாவின் பெற்றோர் 25 வகையான பொருட்களை சீர் வரிசையாக வைத்தனர் இதில் திராட்சை தேங்காய் துணிமணிகள் ஆப்பிள் அன்னாசி பழம் மாம்பழம் வாழைப்பழம் இதனுடன் தக்காளி ஒரு தட்டும் சீர்வரிசையாக வைத்திருப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram