சென்னை: தமிழகத்தில் முதன்முறையாக சென்னையில் பெண்களுக்கான ஒப்பனை அறை, கழிவறை, தாய்ப்பால் ஊட்டும் அறையுடன் கூடிய நடமாடும் ஒப்பனை அறை வாகனங்களை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. வந்தாரை வாழவைக்கும் சென்னை என்ற சொல்லுக்கு ஏற்ப வாழ்வாதாரம் தேடி சென்னைக்கு படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புறங்கள் மற்றும் நகர் பகுதிகளில் இருந்து படித்த பெண்கள் பலர் பணி நிமித்தமாக சென்னைக்கு வருகின்றனர். சொந்த ஊரிலிருந்து பல்வேறு இடங்களுக்கு அவர்கள் புலம் பெயர்ந்து செல்கின்றனர். 

குறிப்பாக, பணிக்காக அதிக அளவில் பெண்கள் சென்னையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வேலைக்காகவும், கல்விக்காகவும் பெண்கள் சென்னைக்கு வருகின்றனர். இத்தகைய சூழலில் பொது இடங்களில் பெண்களுக்கான கழிவறை பிரச்னைகள் கேள்விக்குறியாகவே உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொது இடங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற பகுதிகளில் கழிவறைகள் இல்லாமல் பெண்கள் இன்னல்களுக்கு ஆளாவதை நாம் பார்த்திருப்போம். 

அப்படியே பொது கழிவறைகள் இருந்தாலும் அதனைப் பயன்படுத்த முடியாத நிலையிலும், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாலும் பெரும்பாலான பெண்கள் அந்த கழிவறைகளை பயன்படுத்துவதே கிடையாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பெண்கள் கழிவறைகளுக்கு செல்ல முடியாமல் கடினமான சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பெண்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் ஒருபுறம் இருந்தாலும், திருமணமாகி கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட முடியாமல் அவதிப்படுவது அதை விட கொடுமையான ஒன்று. சென்னைக்கு வரும் பெண்கள் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது காலங்காலமாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram