புதுடெல்லி: தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதி விரைவில் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெவ்வேறு தேதிகளில் நிறைவடைகிறது. இதையடுத்து இந்த 5 மாநில சட்டப்பேரவைகளின் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ், பாஜ, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களையும், மாநில தேர்தல் பொறுப்பாளர்களையும் அறிவித்து வருகின்றன. 

இதன் தொடர்ச்சியாக 5 மாநில தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையமும் ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே முடித்து விட்டது. 
இந்நிலையில் மீதமுள்ள ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் இன்று முதல் ஆய்வு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. 

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று முதல் 3 நாட்களுக்கு ராஜஸ்தானில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துகின்றனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். தொடர்ந்து காவல்துறை, வருமான வரித்துறை, கலால்துறை, போக்குவரத்துறை, ரயில்வே துறை உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram