இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக் கொடியேற்றி வணக்கம் செலுத்துகிறார். பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தவும் உள்ளார். 
 

நாடு முழுவதும் இன்று 77-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு முதல்வர் மு.க மு.க.ஸ்டாலின் தேசிய கொடியேற்றி உரை நிகழ்த்த உள்ளார். முன்னதாக காலை 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்திற்கு வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்கிறார். இதன்பிறகு முப்படையினர் மற்றும் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொள்வார். 
 

தொடர்ந்து கோட்டை கொத்தளத்தின் மேல் உள்ள கொடியேற்றும் இடத்துக்கு முதல்வர் சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்துவார். அதன்பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு சுதந்திர தின உரை நிகழ்த்த உள்ளார்.விழா மேடையில், ‘தகைசால் தமிழர்’ விருதை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். 
 

அதேபோல், டாக்டர் அப்துல்கலாம் விருது, கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூக பணியாளருக்கான விருதுகள், சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்வர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்துள்ளனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram