பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திண்டுக்கல் மாவட்டம் மாவுத்தன்பட்டியை சேர்ந்தவர் சந்திர பாண்டியன். அம்மாயேநாயக்கனூர் பேரூராட்சி அதிமுகவோடு கவுன்சிலராக இருக்கும் இவர் நேற்று காலை நத்தம் அருகே லிங்கவாடியில் வசிக்கும் அவரது மகள் வீட்டிற்கு சென்றார். பின் அங்கிருந்து புறப்பட்ட அவர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே கருப்பன்குளம் கண்மாய் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்

தகவலறிந்த பாலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்திர பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் மற்றும் அது ஈடுபட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this news updates? Please spread the word :)

Follow by Email
LinkedIn
Share
Instagram